Monday 6 February 2012

வாழிய வாழியவே...

வாழும் மலரே!
வாழிய நீ பல்லாண்டு
வாழ்த்திப் பாடுகிறேன் நானும்...

வாழும் கலையோடு
வளமும் நலமும் தன்னோடு
வளர்வாய் நீயும் மலராவே!!!

அரும்பே, அறிவே!
அறியா கலை பல தன்னாலே
அருந்தி பருகும் பதமாவே
அருள்வாய் உன் வாய்மொழியாலே
அனுதினமும் பயின்று
அடுத்து அடுத்து பெறுவாய் ஏற்றமுமே...

அழியா கல்வி பயின்று
அதில் முத்திரையும் பதித்து
அற்புதமாய் வாழிய வாழியவே!!!

4 comments:

  1. அருமையான கவிதை நண்பா

    ReplyDelete
  2. மிக்க நன்றி நண்பரே!. உங்கள் ஊக்கமும் பாராட்டும் எனை இன்னும் நல்ல பதிவுகள் பதிய தூண்டும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மறுபடியும் நன்றி நண்பரே.

    ReplyDelete

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...