Monday 9 January 2012

செட்டிநாடு நோக்கி – கவிதை பாகம் 3 (உணவு பழக்க வழக்கம்)

மெதுமெது இட்லியோடு கதம்ப சட்னியுமா
மெத்மெத்தென்று பணியாரத்தோடு மிளகாய் சட்னியுமா
மெதுவான வடையோடு தேங்காய் சட்னியுமா
மெருதுவாய் சாப்பிட காலபலகாரம் ஆச்சிகேட்டாக...

இலையோடு இடியாப்பம் கோஸ்மல்லி துணையுமா
இனிக்கும் தேங்காய்பாலோடு இடியாப்பம் செய்யட்டுமா
இடிச்ச அரிசியோடு குழாபுட்டு வேணுமா
இனிப்பு உக்காரையும் காலபலகாரம் ஆச்சிகேட்டாக...

இனிப்பு பணியாரம் கார பணியாரமா
இதுக்கு துணையாக இடிச்சமிளகாய் சட்னியுமா
இளந்தோசை முருகலாக நாலைந்து தரட்டுமா
இதுல எதுவேணும் காலபலகாரம் ஆச்சிகேட்டாக...

காலபலகாரம் மெதுஇட்லியோடு மிளகாய் சட்னியுமாய்
காலமெல்லாம் நினைத்திருப்பேன் ருசியோடு சுவையுமே

மதியம் வந்துடும் மறுபடியும் ஆச்சி பட்டியலிட
மதியம் என்ன வேணும் முழுநீளப் பட்டியலிட
மதியம் அரிசி சோறும் பதமாய் கதம்ப சாம்பாரும்
மல்லி ரசமும் மிளகு காரகுழம்பும் வேணுமா

அரிசி சோறு தனியாக வெண்மையிலே
அரைச்ச புளிமிளகாய் புளியோதரை வேணுமா
அரிஞ்ச தேங்காய்பூவோடு தேங்காய்சாதம் வேணுமா
அள்ள அள்ளதூண்டும் பிரியாணி வேணுமா

இளங்குழம்பு வேணுமா பருப்புருண்டை குழம்பா
இஞ்சி மிளகாய் சேர்த்த புளிகுழம்பா
இளஞ்சூட்டில் வறுப்பட்ட கார கத்திரிக்காயா
இலையின் ஓரம்வைக்க வாழைக்காய் வறுவலா

உருளையோடு கேரட்டும் பட்டானி பிரட்டலா
உருண்டை குழம்புக்கு முட்டைக்கோஸ் துவட்டலா
உமிழ்நீர் கீழேவிழும் வெண்டைக்காய் புளிமண்டியா
உருளை வறுவலா ஆவக்காய் ஊறுகாயா

தயிரும் உண்டு கரைத்த மோருமுண்டு
தலைவாழ இலைநிரம்ப வெஞ்சனம் செய்யட்டுமா
தனக்கு வமையி ல்லாத தரணியிலே
தனிச் சமையல் செட்டிநாடு பாணியிலே

இளநீர் பாயாசமா நுங்கு பாயாசமா
இதுக் கெல்லாம் முன்னாடி சூப்வேணுமா
இது முடிச்ச பின்னாடி பீடாவேணுமா
இத்தனையும் கேட்டே பசி போச்சு
இன்னும் வாய்விட்டு அகலலையே சுவையாச்சி...

இன்னும் தொடரும் - இரவு டிபன் மற்றும் சொல்லாடல்கள்

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...